முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்


    உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்     
            வே.ம.அருச்சுணன்                            
                 
கவலைப்படாதே        சகோதராநீ            மகிழ்வுடன்வாழனும்
      காதுமட்டும்         நாலா பக்கம்          நொடியும்திருப்பனும்
தவத்தின் துணை       பெருவாழ்வில்        புகழால் உயரனும்
      தாய்மைக்கு         வணக்கம்கூறி         உயர்வால் நிமிரனும்!

பொல்லாதவர்          சூழ்திருக்கும்            இவ்வுலகினிலே
      போக்கிரிகள்      கழுகுகளாய்ச்           சுற்றும்நாளிலே
சொல்லாமல்            உமைக்கொல்லும்     துயரங்களிலே
      சோராதிருந்தே   வெல்கபுத்திக்           கூர்மைதனிலே!      
  
நல்லாரிங்கே              அழித்தவரே            சுயநலமிகளே
        நாளும்பெருகி     அமைதியழிக்கும்       வஞ்சகர்களே
கொல்லும் திறன்         கொண்டகொடுங்      கோலர்களே
         கோடிவரினும்     தீயோர்உறவைத்       தள்ளுங்களே!

மிஞ்சும்காலம்              நலம்பயக்கவே          நயந்தேவாழ்வீரே
         மீண்டுமொரு      வாழ்வுமில்லை          எண்ணி உணர்வீரே
நெஞ்சத்தின்               நேர்போக்கிலே          உய்வதை ஏற்பீரே
         வீசும்தென்ற      லாய்வாழ்வை            சுவைத்தே மகிழ்வீரே!

   தெய்வங்களின்             கருணையாலே             ஏழையும் வெல்வார்
         தேசம் காப்போர்     வானுயர்ந்தே               சிறக்கவே எழுவார்
   மெய்யாய் வாழ்              வோரிங்கே                  அகிலமும் கொள்வார்
         மேதினிலென்றும்     உயர்மனத்தார்             ஏற்றிப் போற்றுவார்!   
       
   விண்ணவர்போற்ற         உத்தமர் சொல்லை      அறிவில் ஏற்றே
          வீரம்பொதிந்தே      வாழ்தலை அறவோர்   ஏற்பார் நன்றே
   எண்ணம் பதித்தே         அனைவருமிங்கே          உச்சம் முயன்றே
           ஏற்றமுடனே          பதினாறுசெல்வம்         அடைவாய் நன்றே!  

      
  



               





              



              
       
          

                                                                                    










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை