உச்சம்
முயன்றே ஏற்றம் கொள்வீர்
வே.ம.அருச்சுணன்
கவலைப்படாதே சகோதராநீ மகிழ்வுடன்வாழனும்
காதுமட்டும் நாலா
பக்கம் நொடியும்திருப்பனும்
தவத்தின் துணை பெருவாழ்வில் புகழால்
உயரனும்
தாய்மைக்கு வணக்கம்கூறி உயர்வால்
நிமிரனும்!
பொல்லாதவர் சூழ்திருக்கும் இவ்வுலகினிலே
போக்கிரிகள் கழுகுகளாய்ச் சுற்றும்நாளிலே
சொல்லாமல் உமைக்கொல்லும் துயரங்களிலே
சோராதிருந்தே வெல்கபுத்திக் கூர்மைதனிலே!
நல்லாரிங்கே அழித்தவரே சுயநலமிகளே
நாளும்பெருகி அமைதியழிக்கும் வஞ்சகர்களே
கொல்லும் திறன் கொண்டகொடுங் கோலர்களே
கோடிவரினும் தீயோர்உறவைத் தள்ளுங்களே!
மிஞ்சும்காலம் நலம்பயக்கவே நயந்தேவாழ்வீரே
மீண்டுமொரு வாழ்வுமில்லை எண்ணி உணர்வீரே
நெஞ்சத்தின் நேர்போக்கிலே உய்வதை ஏற்பீரே
வீசும்தென்ற லாய்வாழ்வை சுவைத்தே மகிழ்வீரே!
தெய்வங்களின் கருணையாலே ஏழையும்
வெல்வார்
தேசம் காப்போர் வானுயர்ந்தே சிறக்கவே எழுவார்
மெய்யாய் வாழ் வோரிங்கே அகிலமும் கொள்வார்
மேதினிலென்றும் உயர்மனத்தார் ஏற்றிப் போற்றுவார்!
விண்ணவர்போற்ற உத்தமர்
சொல்லை அறிவில் ஏற்றே
வீரம்பொதிந்தே வாழ்தலை அறவோர் ஏற்பார் நன்றே
எண்ணம் பதித்தே
அனைவருமிங்கே உச்சம்
முயன்றே
ஏற்றமுடனே பதினாறுசெல்வம் அடைவாய் நன்றே!
கருத்துகள்
கருத்துரையிடுக