முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் தோட்டம் (புது கவிதை )



புதுக்கவிதை:                  எங்கள் தோட்டம்       
                வே.ம.அருச்சுணன் – மலேசியா 

நான் பிறந்த தோட்டம்
அன்று தேனாய் இனித்தது
அங்கு வாழ்ந்தவர்கள்
யதார்த்தவாதிகள்
நேர்மை மிக்கவர்கள்
அன்பின் பிறப்பிடங்கள்
 கர்ணனின்  ஆத்மாக்கள்
அகிம்சம் பேசும் மகாத்மாக்கள்
நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன் பரம்பரைகள்......!

ஓங்கி நிற்கும்
இரப்பர் மரங்களின் பசுமையை
நீரோடைகளின் தூய்மை
சலசலக்கும் குளிர்ந்த நீர்
நீரிலே நீந்தி மகிழும் மீன்கள்
ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள்
வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப் பயணம்.......!
கோவில் திருவிழாக்கள்
தோட்டத்தைப் பவனிவந்து
அருள் வளங்கும் மாரியம்மன்
பக்திப் பரவசத்தில் மக்கள் கூட்டம்......!

இரண்டு தமிழ்ப்படங்களை
ஒரே இரவில் பார்த்து
மறுநாள் தோட்டமே
உறக்கத்தில் மூழ்கிப்போகும்
இனிய நாள் தூக்க நாள்
மக்களுக்குப் பொன்னாள்…….!



விளையாட்டு மைதானத்தில்
மாலை வேளையிலே
இளைஞர்களின் வீரவிளையாட்டுகள்
பருவ மங்கைகளின்
மீன்விழிப்பார்வைகள்
கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கி நிற்கும்
காளையர்களின் உற்சாகக் கூட்டம்
இருமனங்கள் இணைந்தபின்
மணமேடை கண்டு
பெரியோர்களின் ஆசியில்
வாழ்வைத் தொடங்கும்
இளைஞர் கூட்டம்
பார்த்து மகிழும் காட்சி பரவசமன்றோ.....!
இடுகாடு  இருந்த இடத்திலே
கேளிக்கை மையங்கள்
உலகமே இடுகாட்டில்
ஓடியாடி விளையாடி  மகிழுது......!

நம்பத்தான் முடியவில்லை
நாம் வாழ்ந்த பூமி
கண் முன்னாடியே
கண நேரத்தில்
மாயமாகிப் போய்
வரலாறு
மறந்துவிட்டதே......!
   
நான் வாழ்ந்த தோட்டம் இன்று
அடிச்சுவடே
இல்லாமல் போனது
கண்கள் இரத்த ஆறாகிப் போய் விட்டதே.....!

அந்தநாள்
மீண்டும் வருமா
இனிய தென்றல் மீண்டும் வீசுமா......?

                                    முடிந்தது

      e-mail:  arunveloo @ yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை