முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் தோட்டம் (புது கவிதை )



புதுக்கவிதை:                  எங்கள் தோட்டம்       
                வே.ம.அருச்சுணன் – மலேசியா 

நான் பிறந்த தோட்டம்
அன்று தேனாய் இனித்தது
அங்கு வாழ்ந்தவர்கள்
யதார்த்தவாதிகள்
நேர்மை மிக்கவர்கள்
அன்பின் பிறப்பிடங்கள்
 கர்ணனின்  ஆத்மாக்கள்
அகிம்சம் பேசும் மகாத்மாக்கள்
நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன் பரம்பரைகள்......!

ஓங்கி நிற்கும்
இரப்பர் மரங்களின் பசுமையை
நீரோடைகளின் தூய்மை
சலசலக்கும் குளிர்ந்த நீர்
நீரிலே நீந்தி மகிழும் மீன்கள்
ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள்
வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப் பயணம்.......!
கோவில் திருவிழாக்கள்
தோட்டத்தைப் பவனிவந்து
அருள் வளங்கும் மாரியம்மன்
பக்திப் பரவசத்தில் மக்கள் கூட்டம்......!

இரண்டு தமிழ்ப்படங்களை
ஒரே இரவில் பார்த்து
மறுநாள் தோட்டமே
உறக்கத்தில் மூழ்கிப்போகும்
இனிய நாள் தூக்க நாள்
மக்களுக்குப் பொன்னாள்…….!



விளையாட்டு மைதானத்தில்
மாலை வேளையிலே
இளைஞர்களின் வீரவிளையாட்டுகள்
பருவ மங்கைகளின்
மீன்விழிப்பார்வைகள்
கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கி நிற்கும்
காளையர்களின் உற்சாகக் கூட்டம்
இருமனங்கள் இணைந்தபின்
மணமேடை கண்டு
பெரியோர்களின் ஆசியில்
வாழ்வைத் தொடங்கும்
இளைஞர் கூட்டம்
பார்த்து மகிழும் காட்சி பரவசமன்றோ.....!
இடுகாடு  இருந்த இடத்திலே
கேளிக்கை மையங்கள்
உலகமே இடுகாட்டில்
ஓடியாடி விளையாடி  மகிழுது......!

நம்பத்தான் முடியவில்லை
நாம் வாழ்ந்த பூமி
கண் முன்னாடியே
கண நேரத்தில்
மாயமாகிப் போய்
வரலாறு
மறந்துவிட்டதே......!
   
நான் வாழ்ந்த தோட்டம் இன்று
அடிச்சுவடே
இல்லாமல் போனது
கண்கள் இரத்த ஆறாகிப் போய் விட்டதே.....!

அந்தநாள்
மீண்டும் வருமா
இனிய தென்றல் மீண்டும் வீசுமா......?

                                    முடிந்தது

      e-mail:  arunveloo @ yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...