தீபாவளிச்
சிறப்புக்கவிதை:
நலம் தரும் தீபமே
வளம் சேர்க்க வந்திடுக.....!
(வே.ம.அருச்சுணன் – கிள்ளான்)
இளைஞர் திலகங்களே,
இருளை அகற்றி
ஒளியைத் தரும்
இனியத் தீபத்திருநாளில்
நற்சிந்தனை ஒளியேற்றுவோம்.....!
ஏற்றமிகு வாழ்வுதனை
இதயத்தில் ஆழ்ந்து பதித்திடு
நமது
இனம், மொழி,
கலை, கலாசாரம்
மேலோங்க
தன்மானம்
ஆணிவேராய் தளம் பதிக்க
மீண்டும் ஒருமுறை
ஆழ்மனதில் தீபஒளி ஏற்றிடுக....!
புதுமை உலகு காண
ஒற்றுமைத் தீபம் ஏற்றி
பொறுப்பான இளைஞராய்
செயலில் காட்டி
அறிவுலகம் வியக்கச் செய்து
இந்தச் சமூகம்
இனிதாய் இனியும்
வாழும் என்றே
நம்பிக்கை ஒளியை
உயர்த்தி ஏற்றவே
கூடிடுக இந்நாளில்....!
கருத்துகள்
கருத்துரையிடுக