முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகமூடிகள்



புதுக்கவிதை:             முகமூடிகள்               28.10.2112                    
                             வே.ம.அருச்சுணன்   -   மலேசியா 

எதைப்பற்றியும்
சிந்திப்பதில்லை
என்ன நடந்தாலும்
கவலைப் படுவதில்லை
வீட்டையும் நாட்டையும்
இனத்தையும் மொழியையும்
கனவிலும் நனவிலும்
வாழ்வையும் வளத்தையும்
கடுகளவும் நினைப்பதே இல்லை.....!

பணத்திற்காக
பதவிகளுக்காக
மானம் மரியாதை
காற்றில் பறக்கவிடும்
குள்ளநரிகள்.......!

வினாடிக்கு வினாடி
மாறும் பச்சோந்திகள்
பணத்துக்கு மட்டும் பாய்விரிக்கும்
முகமூடிகள்!

பொதுமகளுக்கும்
இதுகளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லை
கொலை வெறியர்களுக்கும்
இந்த சாக்கடைகளுக்கும்
நோக்கம்  ஒன்றே
ஊரையடித்து உலையில்
போடும் கொலைஞர்கள் இவர்கள்
வாயில்லா பூச்சிகளை
மொட்டையடித்து
கரும்புள்ளிகள் குத்திடும்
உடனிருந்தே கொல்லும்
கொடிய நோயர்கள்.....!

இவர்களிடம்
சர்வ சாக்கிரதையாக
இருப்பது மேல்........!


இங்கே நாய்கள்
இருக்கின்றன என்ற
பெரிய அறிவிப்பு
பலகையை வாயிலில் மாட்டுவது
அடுத்த தலைமுறையாவது
சோரம் போய்விடாது
காக்கலாம் அல்லவா......?   

நீர்வீழ்ச்சியை
சாக்கடையாக்கியப்
புண்ணியவான்கள்....!


                                  முற்றும்
                        

arunveloo@yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...