நமது செங்கோல்......!
இனறைய நாட்டு நடப்புகள்
மனதை வாட்டுகின்றன........!
மூவினமே நாட்டை ஆள்வதாய்
பூரித்திருந்தோம்..........!
ஆனால்....ஏமாளியானோம்.........!
வல்லான் வகுத்ததே
வழி என்றாகிப் போனதே........!
எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.....?
நாட்டு நடப்பதை பார்த்தீரோ........?
மலாய் இனம் ஆட்சியிலே
சீனர் இனம் மாளிகையிலே
தமிழர்களோ.....தமிழர்களோ......
கையேந்தும் நிலையிலே………!
ஐம்பதாம் ஆண்டுகளில்
அரசு பணியில்
நிறைவாய் வாழ்ந்தோம்………!
கறுப்புத்தினத்திற்குப் பின்னர்
கருவிலே அழிக்கப்பட்டோம்.......!
கல்வியில் புறம் தள்ளப்பட்டோம்
கரை சேர முடியாதக் கப்பலாய்
நடுக்கடலில்
சுனாமியால் சுழற்றப்பட்டோம்.......!
நாட்டு விசுவாசிக்களாய்
முந்திச் சென்றோம்
ஆளம் கட்சிக்கு தோள் கொடுத்தோம்.......!
55 ஆண்டுகள்
அவர்கள் காட்டில் பொன்
நம் வாழ்வில் மண்.......!
நாம்,
சிந்திய வியர்வை,
வீணாகிப் போனதே....!
எட்டிய தூரம்
நல்ல தலைவன் தெரியவில்லை......!
தம்மைக் கைத்தூக்கிவிடும்
மண்டேலா இன்னும் இங்கே பிறக்கவில்லை......!
கல்வி,
ஒற்றுமை,
உழைப்பு,
நேர்மை,
சுயமரியாதை,
இனமானம்,
இதுவே
நம்மை வாழவைக்கும் செங்கோல்......!
கருத்துகள்
கருத்துரையிடுக