முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது கவிதை :நமது செங்கோல்



நமது செங்கோல்......!
இனறைய நாட்டு நடப்புகள்
மனதை வாட்டுகின்றன........!
மூவினமே நாட்டை ஆள்வதாய்
பூரித்திருந்தோம்..........!
ஆனால்....ஏமாளியானோம்.........! 

வல்லான் வகுத்ததே
வழி என்றாகிப் போனதே........!
எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.....?
நாட்டு நடப்பதை பார்த்தீரோ........?

மலாய் இனம் ஆட்சியிலே
சீனர் இனம் மாளிகையிலே
தமிழர்களோ.....தமிழர்களோ......
கையேந்தும் நிலையிலே………!

ஐம்பதாம் ஆண்டுகளில்
அரசு பணியில்
நிறைவாய் வாழ்ந்தோம்………!
கறுப்புத்தினத்திற்குப் பின்னர்
கருவிலே அழிக்கப்பட்டோம்.......!

கல்வியில் புறம் தள்ளப்பட்டோம்
கரை சேர முடியாதக் கப்பலாய்
நடுக்கடலில்
சுனாமியால் சுழற்றப்பட்டோம்.......!

நாட்டு விசுவாசிக்களாய்
முந்திச் சென்றோம்
ஆளம் கட்சிக்கு தோள் கொடுத்தோம்.......!
55 ஆண்டுகள்
அவர்கள் காட்டில் பொன்
நம் வாழ்வில் மண்.......!

நாம்,
சிந்திய வியர்வை,
வீணாகிப் போனதே....!

எட்டிய தூரம்
நல்ல தலைவன்  தெரியவில்லை......!
தம்மைக் கைத்தூக்கிவிடும்
மண்டேலா இன்னும் இங்கே பிறக்கவில்லை......!


கல்வி,
ஒற்றுமை,
உழைப்பு,
நேர்மை,
சுயமரியாதை,
இனமானம்,
இதுவே
நம்மை  வாழவைக்கும் செங்கோல்......!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை