முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரக்கம் என்றால் என்ன சரவணா....?


புதுக்கவிதை:      இரக்கம் என்றால் என்ன சரவணா.....?                    
                     வே.ம.அருச்சுணன் –மலேசியா 
சரவணா.....!
நேற்று உயிருடன் இருந்தாய்
ஆனால்,
இன்று நீ உயிருடன் இல்லை.....!
அதற்கு எமன் காரணம் என்றால்
இரக்கமுள்ள என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது....!

உயிருக்குப் போராடினாயே
இறுதிவரை மரணப் போராட்டம் நடத்தினாயே
வாழ்வில் அனுபவிக்காதக் கொடும்   
வலியால் துடிதுடித்தாயே
காப்பாற்றுங்கள் என்று கதறினாயே
காப்பாற்றுவார்கள் என்று
உயிர் போகும் வரை நம்பினாயே......!
ஆனால்,  
நீ கொடுரமாய்க் கொல்லப்பட்டாய்....!

ஈழமண்ணில்
நம்மினம் கொடுமையாய்க்
கொல்லப் பட்டக் காட்சியை
தொலைக்காட்சியில் உலகமக்கள்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களே.....!

அதன் தொடரோ உன் வாழ்வு.....?
முப்பதுக்கும் மேற்பட்டோர்
மௌனிகளாய் விரதம் பூண்டு நின்றார்களே
இரக்கத்தைத் துறந்தவர்களாய்
மனிதநேயத்தைச் சவக்குழியில்
புதைத்தவர்களாய்  
வாழவேண்டிய உன்னை
பதினான்கு வயதிலேயே
 பரலோகம் அனுப்பிவிட்டார்களே.....?

கொன்றவர்கள் பாவிகளல்ல
மல்யுத்தக் காரணாய்
உன்னை வேடிக்கைப் பார்த்தார்களே
அவர்கள் மன்னிக்க முடியாதப் பாவிகள்....!

உன் இறப்பு
உலகுக்குப் பாடமாகிப் போனதே.....!
இந்த உலகில்
மனிதம் மறைந்து
வெகு நாளாகிப் போனது உண்மை......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை