முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரக்கம் என்றால் என்ன சரவணா....?


புதுக்கவிதை:      இரக்கம் என்றால் என்ன சரவணா.....?                    
                     வே.ம.அருச்சுணன் –மலேசியா 
சரவணா.....!
நேற்று உயிருடன் இருந்தாய்
ஆனால்,
இன்று நீ உயிருடன் இல்லை.....!
அதற்கு எமன் காரணம் என்றால்
இரக்கமுள்ள என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது....!

உயிருக்குப் போராடினாயே
இறுதிவரை மரணப் போராட்டம் நடத்தினாயே
வாழ்வில் அனுபவிக்காதக் கொடும்   
வலியால் துடிதுடித்தாயே
காப்பாற்றுங்கள் என்று கதறினாயே
காப்பாற்றுவார்கள் என்று
உயிர் போகும் வரை நம்பினாயே......!
ஆனால்,  
நீ கொடுரமாய்க் கொல்லப்பட்டாய்....!

ஈழமண்ணில்
நம்மினம் கொடுமையாய்க்
கொல்லப் பட்டக் காட்சியை
தொலைக்காட்சியில் உலகமக்கள்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களே.....!

அதன் தொடரோ உன் வாழ்வு.....?
முப்பதுக்கும் மேற்பட்டோர்
மௌனிகளாய் விரதம் பூண்டு நின்றார்களே
இரக்கத்தைத் துறந்தவர்களாய்
மனிதநேயத்தைச் சவக்குழியில்
புதைத்தவர்களாய்  
வாழவேண்டிய உன்னை
பதினான்கு வயதிலேயே
 பரலோகம் அனுப்பிவிட்டார்களே.....?

கொன்றவர்கள் பாவிகளல்ல
மல்யுத்தக் காரணாய்
உன்னை வேடிக்கைப் பார்த்தார்களே
அவர்கள் மன்னிக்க முடியாதப் பாவிகள்....!

உன் இறப்பு
உலகுக்குப் பாடமாகிப் போனதே.....!
இந்த உலகில்
மனிதம் மறைந்து
வெகு நாளாகிப் போனது உண்மை......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...