முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றிக் காட்டுவோம்

:        மாற்றிக் காட்டுவோம்                
                 வே.ம.அருச்சுணன் 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
நன்றே பயன் படுகிறது......!

நூற்றாண்டுகள்  எப்படியோ
வாழ்ந்து விட்டோம் இனி யாரும்  
சிவப்புக் கம்பளம் விரித்து
வண்ண மலர்கள் தூவி
மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
வரவேற்கப் போவதில்லை......!

நாட்டின் நடப்புகள் நாளும்
நடுக்கத்தைத் தருகின்றன
கனவுகள் நிறைவேறும் சூழல்
மங்களாகத் தெரிகிறது நாட்டின்
சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
வாழ்க்கைப் போராட்டம்
தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது.........!

கவன ஈர்புத் தீர்மானத்தை
சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
கரணம் தப்பினால் மரணம்
பிளவுகளை வீசுவிட்டு
தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
துணிவாய்த் துறந்து
அடிமை விலங்கை உடைத்து
அறியாமையைத் துடைத்து
தலைநிமிர்ந்து
போராட்டத்தைத் தொடங்குவோம்.........!

மொழியைக் காப்பதற்குத்
தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்பால்
அருந்த வழிகாண்போம்
கலாச்சாரம் அழிவதற்கு சூது
செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்......!

ஆணவத்தால் அடக்கிவைக்கும்
அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
நேற்று முளைத்த காளான்கள்
நம்மை மிரட்டுவதோ?
கிழடுகள் சில வரிந்து நின்றே
சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
கச்சிதமாய்  முறியடிப்பீர்........!

நம்மைக் கிள்ளுக்கீரையாய்
எண்ணித்திரிவோர் கொட்டம்
அடங்கும் காலம் தொலைவில் இல்லை
நன்றியைக் கொன்று
சதா வம்புக்கு நிற்கும்
ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
முந்திரிக் கொட்டைகள்
முகத்தில் கரியைப்பூசுவோம்
உலகத்தார் காறி துப்பட்டும்.........!

அறிஞர்கள், கல்விமான்கள்
தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
கலைஞர்கள்,தொண்டர்கள்,
தியாகிகள்,அரசியல்வாதிகள்
வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
இனமானம் காக்க இன்றே
ஒன்றாய்  எழுவோம்
நாட்டின் தலையெழுத்தை

மாற்றிக் காட்டுவோம் வாரீர்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...