முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றிக் காட்டுவோம்

:        மாற்றிக் காட்டுவோம்                
                 வே.ம.அருச்சுணன் 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
நன்றே பயன் படுகிறது......!

நூற்றாண்டுகள்  எப்படியோ
வாழ்ந்து விட்டோம் இனி யாரும்  
சிவப்புக் கம்பளம் விரித்து
வண்ண மலர்கள் தூவி
மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
வரவேற்கப் போவதில்லை......!

நாட்டின் நடப்புகள் நாளும்
நடுக்கத்தைத் தருகின்றன
கனவுகள் நிறைவேறும் சூழல்
மங்களாகத் தெரிகிறது நாட்டின்
சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
வாழ்க்கைப் போராட்டம்
தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது.........!

கவன ஈர்புத் தீர்மானத்தை
சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
கரணம் தப்பினால் மரணம்
பிளவுகளை வீசுவிட்டு
தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
துணிவாய்த் துறந்து
அடிமை விலங்கை உடைத்து
அறியாமையைத் துடைத்து
தலைநிமிர்ந்து
போராட்டத்தைத் தொடங்குவோம்.........!

மொழியைக் காப்பதற்குத்
தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்பால்
அருந்த வழிகாண்போம்
கலாச்சாரம் அழிவதற்கு சூது
செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்......!

ஆணவத்தால் அடக்கிவைக்கும்
அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
நேற்று முளைத்த காளான்கள்
நம்மை மிரட்டுவதோ?
கிழடுகள் சில வரிந்து நின்றே
சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
கச்சிதமாய்  முறியடிப்பீர்........!

நம்மைக் கிள்ளுக்கீரையாய்
எண்ணித்திரிவோர் கொட்டம்
அடங்கும் காலம் தொலைவில் இல்லை
நன்றியைக் கொன்று
சதா வம்புக்கு நிற்கும்
ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
முந்திரிக் கொட்டைகள்
முகத்தில் கரியைப்பூசுவோம்
உலகத்தார் காறி துப்பட்டும்.........!

அறிஞர்கள், கல்விமான்கள்
தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
கலைஞர்கள்,தொண்டர்கள்,
தியாகிகள்,அரசியல்வாதிகள்
வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
இனமானம் காக்க இன்றே
ஒன்றாய்  எழுவோம்
நாட்டின் தலையெழுத்தை

மாற்றிக் காட்டுவோம் வாரீர்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...