முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலும் மலேசிய மக்களும்

:        தேர்தலும் மலேசிய மக்களும்         
                                வே.ம.அருச்சுணன் 
நாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல்  5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால்   அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள்.
     இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?
       மலாய்க்காரர்கள் மட்டுமே இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்ற தீய எண்ணத்தில் திட்டமிட்டு இந்தியர்களை வளரவிடாமல் கருவறுத்தவர் மகாதீர்.இந்நாட்டுக்கு வந்தேரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள  இவர் இன்றும் மலேசிய மக்கள் ஒற்றுமையாக வாழவிடாமல்,இனதுவேச  நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மகாதீரை  மக்கள் தண்டிக்க வேண்டும்.எதிர்காலத்தில் நாட்டுப்பிரதமர்களாகப் பொறுப்புக்கு வருபவர்கள் இனியாகிலும் இந்தியர்களின் வாழ்வோடு விளையாடிப் பார்க்காமல் இருப்பார்கள் அல்லவா?
       இன்றுவரையில் கூட முன்னாள் பிரதமர் என்ற நிலையை மறந்து மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்.எதிர்கட்சியினரை வம்புக்கு இழுக்கிறார்.அவர் சொல்வதைதான் அனைத்து மலேசியர்களும் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.எதிர்கட்சியினரும் இந்நாட்டுப் பிரஜைகள்தான் என்ற உரிமையை ஏற்கமறுக்கிறார்.மகாதிருக்கு இருக்கும் அதே உரிமைதான் எதிரணியிலுள்ளவர்களுக்கும் இருக்கின்றன என்பதை வேண்டுமென்றே மறுத்துப்பேசுகிறார்.
      இன்னும் சொல்வதென்றால்,ஆளுங்கட்சியினர் செய்கின்ற அநீதிகளைத் தட்டிக்கேட்கும் சகல உரிமைகளையும் கொண்டவர்கள் எதிர்கட்சியினர் எனும் உண்மையை மகாதீர் விடாப்பிடியாக மறுக்கிறார்.இந்நாட்டின் ஜனநாயகத்தைக்குழிதோண்டிப் புதைக்க எண்ணும் மகாதீரின் தீய எண்ணத்தை மக்கள் தடுக்க வேண்டும். நாட்டு நலனை முன்னிறுத்தி வாக்குச் சீட்டு மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களின் பலத்தைக்காட்டவேண்டும்.அநீதியை எதிர்க்க மலேசியர்கள் அனைவரும் குறிப்பாக இந்தியர்கள் அணி திரள வேண்டும்.
      பல்லினம் வாழும் இந்நாட்டை அநீதியாளர்களிடமிருந்து காக்க வேண்டும்.மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் ஓட்டளிக்க வேண்டும்.தேர்தல் நாள் அன்று மறவாமல்,தவறாமல் நாட்டை நீதியான வழியில் வழி நடத்தவிருக்கும் மக்கள் தலைவர்களுக்கு  தங்களின் பொன்னான வாக்கை செலுத்த வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை