முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்த்தீங்களா நம்ம பிழைப்ப..


கவிதை:          பார்த்திங்களா நம்ம பிழைப்ப        
                    வே.ம.அருச்சுணன் 
சஞ்சியில வந்து
கஞ்சிக்காகப் போராடி
பந்தபாசம் துறந்து
சொந்த நலன் மறந்து
மண்ணுக்காக
உழைச்சவங்க.....!

நாட்டு விசுவாசம்
கடுகளவும் குறையாமல்
மக்களோடு கலந்து
இன்னுயிரைத் தந்து
உருவாக்கிய பூமி
இன்றும் நமக்கு
உயிர் போராட்டம்தான்....!

நம்மீது எவருக்கும்
இரக்கம் இல்லை
உதவுவோரும் இல்லை
இளையோரே
ஊருக்கு உழைத்தது போதும்
சமுதாயம் உயர
நீ என்ன செய்யலாம்
ஆழ்ந்து நோக்கு
வன்முறை வேண்டாம்
நெருப்பாய் உழை....!

முதற்பணி
கல்வியில் கரைசேர்
இரண்டாம் பணி
சுயதொழில்......!

பொருளியல் பலம்
பெருமை தரும்
சமூகம் ஒன்றாகும்
தாய்மொழி நிமிரும்
கலைகள் வளரும்
பண்பாடு ஓங்கும்
உன்னை
உலகம் விமர்சிக்கும்......!

அரசியல்
உன்னை ஆராதிக்கும்
நாட்டின் விதியை முடிவு செய்
எல்லா தகுதிகளும்
பிறப்பிலே உண்டு......!
அம்பிகா
ஒரு விவேகமணி
ஒலித்தார் வெற்றிமணி
சரித்திரம் படைப்பார்
நம்பு வீரமணி.....!

உன்
வீரம், விவேகம்
உச்சம் எட்டும்
பிரித்தாளும் எத்தனம்
திரிந்து போகும்
கிரீடம் வந்தே தீரும்
விதியை மாற்ற
எத்தனுக்கு வலுவில்லை....!
 
ஒன்றாய்ப் பயணிக்க
ஒன்றுகூடும் இளையோரே
இறையருள், நன்மக்கள்
ஆவலில் சேர்ந்திருக்க
அருகில் இருக்கும்
தவறிய வெற்றியைத் தடுமாறாமல்
கொண்டு வந்திடு....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை