முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்


கட்டுரை:    இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்    1
                                    வே.ம.அருச்சுணன் 
புதிய வெளிச்சம் வழி தலைமையாசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் அவர்கள் இந்திய ஆய்வியல் துறையைக் காக்கும் பொருட்டு தமது சக்திக்கும் மீறிய நிலையில் பல ஆய்வுகளையும்,தற்கரீதியாகப் பல்வேறு கருத்துக்களையும் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில்  மிகவும் தெளிவாகவும் தைரியமாகவும் பல வாரங்களாகத் தொடராக எழுதிவந்தார்.
பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க, இந்திய சமுதாயம்,அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புகள்,அரசு சார இயக்கங்கள் களமிறங்கி  இன அழிவிற்கு வித்திடும் இந்தியல் ஆய்வியல் துறை இயற்கை மரணத்தை அடையும் துர்பாக்கிய நிலையைத் தடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்பிற்குச் சாதகமான நிலை ஏற்படாத நிலையில் வருத்தமுடன் தாம் இனியும் அப்பிரச்சனையைத் தொட்டு எழுதப் போவதில்லை எனும் ஆசிரியரின் நிலைப்பாடு வாசகர்களிடையே மிகுந்த வேதனையும் அதர்ச்சியையும் தந்துள்ளது!
மொழிப்போராட்டத்திற்காக, ஒரு வீரத்தமிழனின் கர்ஜனைகள் மிகவும் பாராட்டுக்குரியது. அவரின் வீரப்போராட்டம் வரலாற்று பதிவில் முத்திரைப் பதிக்கத்தக்கதாகும்.வால் முனையை விட பேனா முனை சிறந்தது என்பது வரலாற்று பதிவாகும்.அன்புள்ள ஆசிரியரே,தங்களின் சமுதாயப் பணி அளவிடற்கரியது.சமுதாயம் ஓரளவு விழிப்புற்றதில் தங்களின் பங்களிப்பு அளப்பரியது.தொடர வேண்டும் தங்களின் அறப்பணி. வாசகர்கள் என்றும் தங்கள் பக்கம்!   
இந்நாட்டுத் தமிழர்களின் தலைவிதியைத் நிர்ணயம் செய்யும் ம.இ.கா.1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அரசாங்கத்திலும்,அமைச்சரவையிலும் இன்று வரை பங்கு பெற்று வந்துள்ளது.
சகோதர இனமான சீனர்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது,பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.அதே சமயத்தில் இந்தியர்களின் ஒட்டு மொத்த வளர்சியை ஒப்பிடும் போது மிகவும் வருத்தப்படும்நிலையில் உள்ளது.சீனத்தலைவர்கள், இனத்தின் உயர்வுக்காகத் தொலைநோக்குடன் செயல் பட்டதால் இன்று பொருளாதாரப் பலம் பொருந்திய இனமாக உயர்வுடன் போற்றப்படுகிறது.சுயநலமிக்க இந்திய தலைவர்கள் சுயநலமாகச் செயல் பட்டதால் நமது உரிமைகள் பலவற்றைத் தொடர்ந்து தாரைவார்க்க வேண்டிய நிலைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.
சமுதாயம் இழக்கக்கூடாத ஒன்றாகத் திகழும்,மலாயப் பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறை மிகவிரைவில் இயற்கை மரணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், நம்பிக்கைத் தரும் நடவடிக்கையில் அமைச்சரவையில் வீற்றிருக்கும் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களும்,துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணியம்,துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன்,துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் மற்றும் ஹிண்ட்ராப் தலைவர் வி.வேதமூர்த்தி அவர்களும் இறங்காமல் இருப்பது அதர்ச்சியளிக்கிறது. பிரதமரின்தலையீடு மட்டுமே இப்பிரச்சனைக்குத் நிரந்திரத் தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து இவர்கள் உடனே செயல் படுவார்கள் என்று சமுதாயம் பெரிதும் நம்புகிறது.மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது நம்பிக்கை வை பிரதமர் நஷிப் அவர்களின் கடமையாகும்.

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் போல் இந்நாட்டுத் தமிழர்களும் மொழி இழந்து வாழும் நிலைக்கு இன்றையத் தலைவர்கள் கொண்டு செல்லமாட்டார்கள் என்று இந்திய சமுதாயம் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது! மொழி இனத்தின்உயிர்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்,எனும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்து மனதில் இருக்கட்டும்!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...