ஏமாளிகளா...கோமாளிகளா....?
வே.ம.அருச்சுணன்
மொத்தமாய்
ஐந்து ஆண்டுகள்
முடிந்துவிட்ட நிலையில்
5.5.2013 இல்
மக்களின் மனங்களைச்
செவ்வனே சுத்திகரிக்க
மீண்டுமொருமுறை
நல்லாட்சிக்கு வரவுகூற
ஜனநாயக தீபமேற்ற
நடந்தது பதின்மூன்றாவது பொதுத்தேர்தல்.....!
தேர்தலுக்கு முன்னும் பின்னும்
வேட்பாளர்கள்,கட்சித்தொண்டர்கள்
வானவில்லையும் மிஞ்சும் மனிதர்கள்
விஸ்வரூமுடன் அரங்கேற்றிய
அடாவடிகள்
ஜீரணிக்கவும் முடியவில்லை
தடுக்கவும் வழியில்லை
தப்பாட்டம் வென்றது.......!
தேர்தலுக்கு மட்டுமே
முகம் காட்டும் நிபுணர்கள்
காட்டிய வித்தையில்
அதிசயங்கள் பல்கிப் போயின
அடுத்த தேர்தல் மட்டும் அவை
மனத்திரையில் ஓங்கி நிற்கும்
இரட்டைக் கோபுரங்கள்.....!
புதிய வார்ப்புகளாய்
வரலாறு காணா குளறுபடிகள்
மனங்கள் ஏற்க மறுக்கும் நடமுறைகள்
வெளிநாட்டார்
கண்டு களிப்புற்ற காட்சிகள்.....!
ஆள்வோர் வகுத்த வழி
கபட நாடகங்கள்
தலைப்பாகை கட்டிக் கொண்டன
தர்மம் குப்புறக்கவிழ்ந்து கொள்கிறது
கைகளைப் பிசைந்த நின்ற
மக்களின் முகங்களில்
கருமேகக்கூட்டங்கள்......!
ஆற்றிலொரு சேற்றிலொரு கால்கள்
இரண்டும் கெட்ட நிலை
தமிழர் வாழ்வு
சோதனையின் உச்சமா?
வெற்றியன்னை முத்தமிட அச்சமா?
இனங்களின் துச்சமா?
நமக்கு வாழ்வே எச்சமா?
கையேந்தும்
நிலையில் வாழ்வதாலே
பகடக்காயாக மாற்றப்பட்டோம்
மற்ற குடியினருக்கும்
நிகராக வைப்பதற்கு
ஆளும் வர்கத்தினருக்கு
குணமும் இல்லை வாழ்விக்க
மனமும் இல்லை.....!
வெற்றி முழக்கம்
தூக்கலாய்க்
ரீங்காரமிடுகிறது
அதிகார அதிர்வேட்டுகளும்
மூலைமுடுக்குகளில் ஓங்காரமிடுகிறது
வழக்கம் போல் தர்பார்........!
வாக்கு மட்டும்
வக்கணையாய்ப் பெற்று
நடுவீதியிலே விட்டகதை
இன்னுமொரு
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குத்
தொடர வேண்டுமா....?
முடிவு
கருத்துகள்
கருத்துரையிடுக