முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏமாளிகளா...கோமாளிகளா...?

ஏமாளிகளா...கோமாளிகளா....?       
                          வே.ம.அருச்சுணன் 

மொத்தமாய்
ஐந்து ஆண்டுகள்                     
முடிந்துவிட்ட நிலையில்
5.5.2013 இல்
மக்களின் மனங்களைச்
செவ்வனே சுத்திகரிக்க
மீண்டுமொருமுறை
நல்லாட்சிக்கு வரவுகூற
ஜனநாயக தீபமேற்ற
நடந்தது பதின்மூன்றாவது பொதுத்தேர்தல்.....!

தேர்தலுக்கு முன்னும் பின்னும்
வேட்பாளர்கள்,கட்சித்தொண்டர்கள்
வானவில்லையும் மிஞ்சும் மனிதர்கள்
விஸ்வரூமுடன் அரங்கேற்றிய
அடாவடிகள்
ஜீரணிக்கவும் முடியவில்லை
தடுக்கவும் வழியில்லை
தப்பாட்டம் வென்றது.......!

தேர்தலுக்கு மட்டுமே
முகம் காட்டும் நிபுணர்கள்
காட்டிய வித்தையில்
அதிசயங்கள் பல்கிப் போயின
அடுத்த தேர்தல் மட்டும் அவை
மனத்திரையில் ஓங்கி நிற்கும்
இரட்டைக் கோபுரங்கள்.....!

புதிய வார்ப்புகளாய்
வரலாறு காணா குளறுபடிகள்
மனங்கள் ஏற்க மறுக்கும் நடமுறைகள்
வெளிநாட்டார்
கண்டு களிப்புற்ற காட்சிகள்.....!

ஆள்வோர் வகுத்த வழி
கபட நாடகங்கள்
தலைப்பாகை கட்டிக் கொண்டன
தர்மம் குப்புறக்கவிழ்ந்து கொள்கிறது
கைகளைப் பிசைந்த நின்ற
மக்களின் முகங்களில்
கருமேகக்கூட்டங்கள்......!

ஆற்றிலொரு சேற்றிலொரு கால்கள்
இரண்டும் கெட்ட நிலை
தமிழர் வாழ்வு 
சோதனையின் உச்சமா?
வெற்றியன்னை முத்தமிட அச்சமா?
இனங்களின் துச்சமா?
நமக்கு வாழ்வே எச்சமா?

கையேந்தும்
நிலையில் வாழ்வதாலே
பகடக்காயாக மாற்றப்பட்டோம்  
மற்ற குடியினருக்கும்
நிகராக வைப்பதற்கு
ஆளும் வர்கத்தினருக்கு
குணமும் இல்லை வாழ்விக்க
மனமும் இல்லை.....!

வெற்றி முழக்கம்
தூக்கலாய்க்  ரீங்காரமிடுகிறது
அதிகார அதிர்வேட்டுகளும்
மூலைமுடுக்குகளில் ஓங்காரமிடுகிறது
வழக்கம் போல் தர்பார்........!  

வாக்கு மட்டும்
வக்கணையாய்ப் பெற்று
நடுவீதியிலே விட்டகதை
இன்னுமொரு
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குத்
தொடர வேண்டுமா....?

                                     முடிவு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை