: நீதி
நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்
வே.ம.அருச்சுணன்
வாழ்வும்
வளமும்
தந்தவளே
நலம் காத்த
மகிழ்ந்தவளே
என்னைப் பெற்றவளே
உன்னை
வணங்குவதில்
தயக்கமில்லை
பூச்சூடத்
தவறியதுமில்லை
தீபத்திருநாளில்
ஒளியேற்ற மறந்ததில்லை.....!
நூற்றாண்டுகள்
பல கடந்தும்
தமிழர்
வாழ்வில் வசந்தம்
எட்டாகக்
கனியாகிப் போனதேனோ?
முதுகொடிய
உழைத்தவன் வாழ்வு
கானல்
நீர்தானா?
நேற்று
கால் பதித்தோர்
குறிஞ்சி
நில மன்னர்களாய்ப் பயணிக்க
பாலை
நிலத்து அகதிகளாய் நாம்
அவதிகளின்
உச்சியில் புதையுண்டு
நாளும்
மூச்சுவிட தினறுவதேன்?
நல்வழிகாட்ட
நாட்டிலே
ஆள்வோர்
முனைவதில்லை
பிறந்த
பூமியிலே
தென்றலைக்
கட்டிக் கொள்ள
அடுக்கடுக்கான
தடைகள்
பேரலையாய்ச்
சீறுவதேன்?
நன்னாளில்
என்
குறையைக் கொட்டிவிட்டேன்
காயமுற்ற
மனதுக்கு மருந்திட
குட்டித்தீவில்
தனியனாய்ப் புலம்புகின்றேன்
நம்
வாழ்வும் சிறக்குமென்றே
இரண்டு
கோடி மக்களில் ஒருவனாய்
நம்பிக்கை
ஒளியுடன் உன்னை
அன்னாந்து
பார்க்கிறேன்
தன்மானச்
சிங்கமாய்
ஒளிபடைத்த
கண்களாய்
தீப
ஒளி ஏற்றுகிறேன்....!
வணங்கிடும்
இனமாக இங்கே
வழிகாண
இறைஞ்சுகிறேன்
நீதிகள்
நிலை பெறவே
அநீதிகள்
அடியோடு மறையவே
தமிழர்கள்
அனைவரும்
ஒற்றுமை
ஒளியை ஏற்றிவைப்போம்
தமிழரினம்
ஒன்றென்று
புரிய
வைப்போம் தவறாமல்
தீபத்திருநாளைக்
கொண்டாடி
மகிழ்ந்திடுவோம்…….!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக