முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்

:    நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்  
                      வே.ம.அருச்சுணன்

வாழ்வும்  வளமும்  தந்தவளே
நலம்  காத்த  மகிழ்ந்தவளே
என்னைப்  பெற்றவளே  உன்னை
வணங்குவதில் தயக்கமில்லை
பூச்சூடத்  தவறியதுமில்லை
தீபத்திருநாளில் ஒளியேற்ற மறந்ததில்லை.....!

நூற்றாண்டுகள் பல கடந்தும்
தமிழர் வாழ்வில் வசந்தம்
எட்டாகக் கனியாகிப் போனதேனோ?
முதுகொடிய உழைத்தவன் வாழ்வு  
கானல் நீர்தானா?

நேற்று கால் பதித்தோர்
குறிஞ்சி நில மன்னர்களாய்ப் பயணிக்க
பாலை நிலத்து அகதிகளாய்  நாம்
அவதிகளின் உச்சியில் புதையுண்டு
நாளும் மூச்சுவிட தினறுவதேன்?

நல்வழிகாட்ட  நாட்டிலே
ஆள்வோர்  முனைவதில்லை
பிறந்த பூமியிலே
தென்றலைக் கட்டிக் கொள்ள
அடுக்கடுக்கான தடைகள்
பேரலையாய்ச் சீறுவதேன்?

நன்னாளில்
என் குறையைக் கொட்டிவிட்டேன்
காயமுற்ற மனதுக்கு மருந்திட
குட்டித்தீவில் தனியனாய்ப் புலம்புகின்றேன்
நம் வாழ்வும்  சிறக்குமென்றே
இரண்டு கோடி மக்களில் ஒருவனாய்
நம்பிக்கை ஒளியுடன் உன்னை
அன்னாந்து பார்க்கிறேன்
தன்மானச் சிங்கமாய்
ஒளிபடைத்த கண்களாய்
தீப ஒளி ஏற்றுகிறேன்....!

வணங்கிடும் இனமாக இங்கே
வழிகாண இறைஞ்சுகிறேன்
நீதிகள் நிலை பெறவே
அநீதிகள் அடியோடு மறையவே
தமிழர்கள் அனைவரும்
ஒற்றுமை ஒளியை ஏற்றிவைப்போம்
தமிழரினம் ஒன்றென்று
புரிய வைப்போம் தவறாமல்
தீபத்திருநாளைக்  கொண்டாடி
மகிழ்ந்திடுவோம்…….!



                                  முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை