முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கயவர் வீழ்வது நிச்சயம்

         கயவர் வீழ்வது நிச்சயம்   
                              வே.ம.அருச்சுணன் 
எத்தனைக் காலம்தான்
எத்தர்கள் உலகை ஏமாற்றுவர்
உண்மை உரைக்க
தீ குளிக்க களம்
இறங்கிவிட்ட தினகுரல்
மிரட்டலுக்கு அஞ்சி
ஒடுங்கிவிடும் என்ற
எண்ணத்தில் மஞ்சள் குளிக்கும்
சமுக விரோதிகளுக்கு
சிவப்புமணி ஒலிக்கத்தான்
தினம் ஓங்கி எழுகிறது
தினகுரல்....!

மக்களின்  போராட்டம்
நிச்சயம் வெல்லும்
கொடிய மனங்களுக்கு
மறவாமல் தயங்காமல்
உண்மை விளம்பியால்
பீடுநடை போடும்
சிம்மக்குரலை வலிந்து
ஒடுக்க நினைப்போர்
தீயில் அழிவார் திண்ணம்...!

ஏழைச்சமுதாயத்தை மேலும்
போண்டியாக்க நினைபோர்
கொட்டம் பொடியாக்க
சூரியனாய்த் தினம் எழுந்து
நிற்கும் தினகுரலை
அழிக்க நினைப்போர் உண்மையாய்
அழிந்து போவது நிதர்சனம்.....!

சமுதாயம் விழிக்கத் தொடங்கி
நாட்கள் பல கடந்து விட்டன
அறிவிலிகள் மாறாமலிருப்பது
விந்தை.....விந்தை...!

தீயவர் தீயில் அழியும்
காலம் விரைகிறது
தினக்குரல் வலுவும்  நிறைகிறது.
தாயின் குரல் வெட்டும்
கயவர் வீழ்வது நிச்சயம்.....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை