கயவர்
வீழ்வது நிச்சயம்
வே.ம.அருச்சுணன்
எத்தனைக் காலம்தான்
எத்தர்கள் உலகை ஏமாற்றுவர்
உண்மை உரைக்க
தீ குளிக்க களம்
இறங்கிவிட்ட தினகுரல்
மிரட்டலுக்கு அஞ்சி
ஒடுங்கிவிடும் என்ற
எண்ணத்தில் மஞ்சள் குளிக்கும்
சமுக விரோதிகளுக்கு
சிவப்புமணி ஒலிக்கத்தான்
தினம் ஓங்கி எழுகிறது
தினகுரல்....!
மக்களின் போராட்டம்
நிச்சயம் வெல்லும்
கொடிய மனங்களுக்கு
மறவாமல் தயங்காமல்
உண்மை விளம்பியால்
பீடுநடை போடும்
சிம்மக்குரலை வலிந்து
ஒடுக்க நினைப்போர்
தீயில் அழிவார் திண்ணம்...!
ஏழைச்சமுதாயத்தை மேலும்
போண்டியாக்க நினைபோர்
கொட்டம் பொடியாக்க
சூரியனாய்த் தினம் எழுந்து
நிற்கும் தினகுரலை
அழிக்க நினைப்போர் உண்மையாய்
அழிந்து போவது நிதர்சனம்.....!
சமுதாயம் விழிக்கத் தொடங்கி
நாட்கள் பல கடந்து விட்டன
அறிவிலிகள் மாறாமலிருப்பது
விந்தை.....விந்தை...!
தீயவர் தீயில் அழியும்
காலம் விரைகிறது
தினக்குரல் வலுவும் நிறைகிறது.
தாயின் குரல் வெட்டும்
கயவர் வீழ்வது நிச்சயம்.....!
கருத்துகள்
கருத்துரையிடுக