முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்

“வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்!”         
                     வே.ம.அருச்சுணன்


இன்றைய பத்திரிகையுலகில்
சமுதாய உயர்வுக்கும் உண்மைக்கும் தினம்
உச்சத்தில் குரல் கொடுக்கும் 
தலைமை ஆசிரியர் பி.ஆர்.இராஜனே.........!

நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம்
வீரமும் விவேகமும் தரித்து தமிழ்
உள்ளங்களில் புத்தாக்கம் கொழுந்துவிட்டெரிய
நாளைய விடியலுக்கு நம்பிக்கை ஒளிதந்த
முடிசூடா மன்னரே உங்களுக்கு
எங்களின் வீரவணக்கங்கள்............!

மறத்தமிழனின் மாண்பும்
செம்மொழியின் சிறப்பும்
சொந்த இனத்தை துறக்கும்
தடம் பிறழும் தமிழனக்கு
அறைந்து சொல்ல எழுதுகோல்
எடுத்த உத்தமரே உங்கள் உண்மை
வாதத்தால் கற்சிலையும் தலைவணங்கும்
உத்தமர் மனம் இறங்கும்
குற்றம் சொல்வோர் தலை வெடிக்கும்.........!

அரசன் அன்றே கொல்வான்
இறைவன் நின்றே கொல்வான் என்பது நீதி
ஆற்றாமையால் உங்களை இகழ்வது அநீதி
தன்னினம் காப்பதில் என்றும் இராஜாதான்
போராட்டம் வெல்வது உறுதி என்போம்
வாடியத் தமிழனுக்கும் நம்பிக் கெட்டவனுக்கும்
வெற்றிக்கனியைத் தருவதில் நீங்கள்
கலங்கரை விளக்கம்..........!

பேச்சாலும் நிகரில்லா எழுத்தாலும்
உணர்வையும் தன்மானத்தையும்
தட்டி எழுப்பும் வித்தவனே
நம்மைக் கூறுபோடும் கொடும் மனத்தார்
இல்லாமை செய்திடுவீர்
உற்றதுணை நாங்கள் என்போம்
சாகாவரம் பெற்ற உங்கள் எழுத்துக்கள்
எதிரியைத் தவடுபொடியாக்கிவிடும்   
தமிழனை வீழ்த்த நினைப்போர் இங்கே
தரைமட்டமாக்கிடுவீர்..........!

எழுதை மெருகூட்டி எங்கள்
எழுத்துக்கள் உலகில் பவணிவரச் செய்யும்
தலைமை ஆசிரியரே எந்நாளும்
நன்றி மறவோம்; தாயன்பைப் புகழ்ந்திடுவ்வோம்
எங்கள் மனம் குளிரப் புதிது புதிதாய்
அங்கங்கள் அலங்கரிக்க நாளும்
கண்குளிரக் காண்கின்றோம்
வாசகர் வட்டம் மனங்கவரும்
தினக்குரலுக்கு தங்கள் தலைமை
மேன்மை என்போம் என்றும்
உடன் பிறப்புகளாய் உதவிடும்
பணியாளர்கள் அருமையிலும் அருமை
துணிவே துணை தினக்குரலின் பாசுக்கு
தவறாமல் நன்றி சொல்வோம்
ஒற்றுமையால் உலகை ஆள்வதற்கு மகிழ்ந்தே
உவமை சொல்வோம்..........!
                      
                            முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை