முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்க நகர சிங்கமே

:            சிங்க நகரின் சிங்கமே              24.6.2013
                       வே.ம. அருச்சுணன் - மலேசியா
சிங்க நகரை
தங்க நகராக்கிய  சிங்கமே
உன் கர்ஜனைகள்
உருமாற்றத்தின் உச்சமாகின
கடுகுத்தீவை உலகம் மொய்க்க வைத்தாய்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதென்பார்
உனது தொலைநோக்கு
உலகக்கண்களை விழிபிதுங்க வைத்தாய்
உன்னை மட்டுமே பார்க்காமல்
உலகம் ஓங்கவைத்தாய்
இறை தேடும் பறவைகளை வாழவைத்தாய்........!

தூய்மையான நாடு, மாசற்ற ஆட்சி 
ஜனநாயகத்தின்  உலகக் கோப்பையை
நீ ஒருவனே தனித்து வென்றாய்.....!

உயர்வான கல்வி,மருத்துவம்
காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை
பறந்து செல்ல சாங்கி
சட்டம் போற்றும் மக்கள்
உனது வெற்றியின் விழுதுகள்......!

தொன்னூரைக் கடந்தாலும்
நாட்டு நலம் போற்றும்
கர்மவீரனே நீர் ஓர் அதிசயம்
நடை தளர்ந்தாலும் உன் கர்ஜனை தீவெங்கும் கேட்கும்.....!

வாழும்போதே நாட்டுக்கு நல்லதைச் செய்யும் மனதை
மக்கள் பெற்றனர்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை யதார்த்தத்தில் கண்டனர்
உழைப்பின் தத்துவத்தை அழுத்தமாய்க் கூறியவனே
கணம் உனை மறந்தால் தோல்வி என்றும் தப்பாது
வாழ்கவே பல்லாண்டு
சிங்க நகர் சிங்கமே............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை