: சிங்க
நகரின் சிங்கமே 24.6.2013
வே.ம. அருச்சுணன் - மலேசியா
சிங்க
நகரை
தங்க
நகராக்கிய சிங்கமே
உன்
கர்ஜனைகள்
உருமாற்றத்தின்
உச்சமாகின
கடுகுத்தீவை
உலகம் மொய்க்க வைத்தாய்
கடுகு
சிறுத்தாலும் காரம் போகாதென்பார்
உனது
தொலைநோக்கு
உலகக்கண்களை
விழிபிதுங்க வைத்தாய்
உன்னை
மட்டுமே பார்க்காமல்
உலகம்
ஓங்கவைத்தாய்
இறை
தேடும் பறவைகளை வாழவைத்தாய்........!
தூய்மையான
நாடு, மாசற்ற ஆட்சி
ஜனநாயகத்தின்
உலகக் கோப்பையை
நீ
ஒருவனே தனித்து வென்றாய்.....!
உயர்வான
கல்வி,மருத்துவம்
காலத்திற்கு
ஏற்ற வாழ்க்கை
பறந்து
செல்ல சாங்கி
சட்டம்
போற்றும் மக்கள்
உனது
வெற்றியின் விழுதுகள்......!
தொன்னூரைக்
கடந்தாலும்
நாட்டு
நலம் போற்றும்
கர்மவீரனே
நீர் ஓர் அதிசயம்
நடை
தளர்ந்தாலும் உன் கர்ஜனை தீவெங்கும் கேட்கும்.....!
வாழும்போதே
நாட்டுக்கு நல்லதைச் செய்யும் மனதை
மக்கள்
பெற்றனர்
கூடிவாழ்ந்தால்
கோடி நன்மை யதார்த்தத்தில் கண்டனர்
உழைப்பின்
தத்துவத்தை அழுத்தமாய்க் கூறியவனே
கணம்
உனை மறந்தால் தோல்வி என்றும் தப்பாது
வாழ்கவே
பல்லாண்டு
சிங்க
நகர் சிங்கமே............!
கருத்துகள்
கருத்துரையிடுக