முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்      
                                                வே.ம.அருச்சுணன்  
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளின் சேவையின் மீது  மக்களின் அதிருப்தி மீண்டும் தலையெடுத்திருப்பது மிகவும் வருந்ததக்கதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.கெந்திங்மலைக்குப் பயணித்த  உல்லாசப் பயணப் பேருந்து விபத்தில் 37பேர் மரணத்தைத்தழுவிய வேளையில் 16 பேர் கடுமையாகக் காயமுற்றனர்.கடந்த 17 ஆண்டுகளில் மிக மோசமானதாகக் கூறப்படும் இந்த கொடூர விபத்துக்குப் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பற்ற நடவடிக்கையும் அடாவடித்தனமும்தான் காரணங்களாகக் கூறினாலும் ஈடு இணையற்ற மனித உயிர்கள் இழந்து துடிக்கும் துயரம் தொடர்கதையாகிப் போவதுதான் வேதனையின் உச்சமாகக் கருத வேண்டியுள்ளது.
மேலும் இதுபோன்ற துயரச்சம்பவங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்கும் பேருந்து நிறுவனங்களை மிகுந்த இல்லாபத்தில் நடத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு,முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்  செல்வச் சீமான்களுக்குத் துணைபோவதுதான் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது, தொடரும் துயரங்களும் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.    
 அண்மைய காலமாக விரைவு உல்லாசப் பேருந்து விபத்துகளால்,உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் உயிழப்புகள் ஏறுமுகமாக இருப்பதுடன்,பொது வாகனங்களைப் பயன்படுத்தும்படி மக்களை வலியுறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையும் கேலிக்கூத்தாகிவிட்டது.
2009 ஜோகூர்,பாகோவுக்கருகில் நடைபெற்ற இரட்டை மாடிப் பேருந்தால்,பத்து பயணிகள் இறந்தனர்,2010 கேமரன் ஹலண்ட்ஸ்,சிம்பாங் பூலாய் விபத்தில் 28 தாய்லாந்து சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.அதே ஆண்டில் கெந்திங் செம்பா விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்ததுடன் 39 பேர்காயமுற்றனர்.சபா,கோத்தா கினபாலு,கம்போங் மோயோக் கருகில் நடந்த விபத்தில் 4 சபா சிறைச்சாலை அதிகாரிகள் இறந்தனர்.சிம்பாங் அம்பாட்,டோல் சாவடிக்கருகில் நடைபெற்ற சாலை விபத்தில் 13 பேர் இறந்தனர்.2011 ஆம் ஆண்டு புருணை தம்பாருலி-ரானாவ் சாலை விபத்தில் மரத்தில் மோதிய பேருந்து இரண்டாக பிளந்தது.இதில் 7 பேர் இறந்ததுடன் 9 பயணிகள் காயமுற்றனர்.எதிரும் புதிருமாக பேருந்தும்  நீண்ட லாரியுடன் மோதிக் கொண்டதில் தந்தையும் மகனும் இறந்ததுடன்,5 பயணிகள் கடுமையான காயங்களுக்குள்ளாயினர். 2012 இல் கெந்திங் ஹலண்ட்ஸ்சுக்குச் செல்லும் வழியில், கோலாலம்பூர்-காராக் 4.5 கி.மீ. நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் 2 இந்தியச்சுற்றுப்பயணிகள் இறந்த வேளையில் 22 பயணிகள் காயமுற்றனர்.2013 பிப்ரவரி 25 இல் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலைவிபத்தில்,இந்தோனேசிய பெண்ணும் இரண்டு ஆண்களும் பலியாயினர்.
இப்படி நாளும் பொது வாகனங்களால் ஏற்படும் பெரும் விபத்துகள் பெருகியே வருகின்றன.விபத்துக்கான உண்மைக் காரணங்களை அரசாங்கம் துரிதமாகக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கையில் இறங்குவதாகத் தெரியவில்லை. மக்களின் துயரங்கள் விடுபடும் சூழலும் கண்ணுக்குப் புலனாகவில்லை.விபத்து நடைபெற்ற சமயத்தில் அமைச்சர்கள் சொல்லும் பல உறுதி மொழிகள் சில தினங்களில் மறைந்து போய்விடுகின்றன.பேருந்து நடத்துனர் மீது தகுந்த நடவடிக்கைகள் இல்லாமலேயே போக்குவரத்து அமைச்சும் அதன் அமலாக்க அதிகாரிகளும் பொது மக்களின் மன உணர்வுகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் சாக்குப் போக்குகளைச் சொல்லித்தப்பித்துக் கொள்வது முறையன்று. தவறிழைப்போருக்குத் எதிராகத் பாரபட்சமின்றித் தகுந்த நடவடிக்கைகளைத் துரிதமாக  எடுத்துப்  பயணிகளின் உயிர்களைக் காப்பதுப் பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
சுற்றுப் பயணிகள் நாள்தோறும் உலப்புகழ் பெற்றுத் திகழும் கெந்திங்மலைக்குப் படையெடுக்கும் உள்ளூர்,வெளியூர் சுற்றுப்பயணிகள் பயமின்றி பயணிக்க விசாலமான சாலைகளும்,விபத்துகளை ஏற்படுத்தும் மரண வலைவுகளை நேர்படுத்துவதுடன்,அனுபவமிக்க ஓட்டுனர்கள் பேருந்தைச் செலுத்த அனுமதிக்க வேண்டும்.மேலும்,சாலையில் வேகக் கட்டுப்பாட்டைக் கவனிக்க அதிகாரிகள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.வாகனங்கள் புதியதாகவும் நல்ல நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்காணிப்பதுடன்,சாலையைப் பயன் படுத்தும் அனைவருக்கும் வழிகாட்டிகளாகவும்திகழ்பவர்களாகவும்இருக்கவேண்டும்.மலையின்அடிவாரத்திலிருந்து மலை உச்சிவரையிலும் வாகனங்கள் பாதுகாப்புடன் சென்று அடைவதையும்,பின்னர் மலை உச்சியிலிருந்து அடிவாரத்தைப் பாதுகாப்பாக வாகனங்கள் அடைவதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பாக,போக்குவரத்து அமைச்சு சிறந்த சேவைகளை மக்களுக்கு ஆற்ற உடன் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
பெரிய பேருந்துகளில் மக்கள் பயணிப்பதைவிட,வேன்கள் போன்ற சிறிய வாகனங்களில் பயணம் மேற் கொள்வது சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.விபத்துகள் பெருமளவில்  ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட பயணிகள் இருக்கையில் அமர்ந்தவாறு வசதியாகப் பயணிக்கலாம்.குறைந்த கட்டணத்தில் நிறைவானப் பயனைச் சுற்றுப்பயணிகள் அடையலாம்.சாலைப்பாதுகாப்பு அதிகாரிகளும் வாகனங்களை எளிதில் கண்காணிப்பதுடன்  தேவையான உதவிகளையும் வாகன ஓட்டுனர்கள் எளிதில் வழங்க இயலும். சிறிய வாகனங்களைப் பராமரிக்கும் செலவும் ஓட்டுனர்களுக்குக் குறையும் மேலும் அதிகமான ஓட்டுனர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்.உள்ளூர் மக்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கும் வேலைகளைச் செய்ய சம்பந்தப்பட்ட பேருந்து  நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்,சாலைப்போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் இதனை அணுக்கமாகக் கவனிப்பது அவசியமாகும்.மக்களின் தேவைகளை உதாசினம் செய்யும்,பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.தவறிழைக்கும் நிறுவனங்களுடன் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது.
பேருந்து நடத்துனர்கள்,மலேசிய மக்களின் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.மலாய்க்காரர்கள் மட்டுமே நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருப்பதுக் கூடாது. குறிப்பிட்ட ஒரு இனத்தின் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் நிறுவனங்களில் பல குளறுபடிகள் நிகழ்வதற்கு வழிகோலும்.நாட்டின் வளப்பத்தை அனைத்து இனங்களும் அனுபவிக்க  அரசு வழிவிட வேண்டும். நாட்டின் மீது பற்றும் பாசமும் ஏற்படுவதற்கும் பொருளாதாரப் பலம் பல்லின மக்களிடையே சம அளவில் இருப்பது நாட்டின் மேம்பாட்டையும் மேலும் வலுபெறச் செய்யும்.அரசின் தொலை நோக்கினால்,பேருந்து பயணிகள் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியடனும் நாட்டை வலம்வரட்டும்!  


                                    முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை