(சுதந்திரதினச் சிறப்புக் கவிதை)
கவிதை: சுதந்திரத்தாயே
வணங்குகிறோம்
வே.ம.அருச்சுணன்
31
ஆகஸ்டு 1957
இனிய
வரவுக்காக
உன்
திருமுகத்தைக்
கண்குளிரக்
காண்பதற்கு
மூவின
மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா
என்றே
ஏழுமுறை
நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக்
கூறி வரவு சொன்னோம்
எங்கள்
உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த
வெள்ளமாகியது..........!
அன்றுதான்
மக்கள்
ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும்
மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச்
சுடரொளி வியாபித்தது
மக்களிடையே
பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை
சுதந்திரத்தைச்
சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்
வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை
நாளும் காத்திட
வளமுடனே
வாழ்வதற்கு
வழிதனைக்
காட்டிடுவாய்
எங்கள்
அன்புத்தாயே.........!
ஐம்பத்தாறு
ஆண்டுகள்
பல்வேறு சோதனைகள்
அணிகளாய்ப்
பெற்றோம்
குள்ளநரிக்
கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து
விளையாட்டுக்கள் புரிந்தன
நீ
தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு
வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம்
புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும்
பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால்
வெற்றி கொண்டோம்.........!
தேசியக்
கொடியில் மிளிரும்
வண்ணம்
போல் மன ஒருமையால்
உலக
மக்கள் பலருடனே
எண்ணத்தால்
கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்
பெறுகிறோம்
அரசும்
மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி
தருவதால் வாழ்கிறோம்............!
இனிய
நாளிலே
இதயம்
மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம்
பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால்
மன்னித்திடுத் தாயே
மனதில்
ஏதும் கலங்கமில்லை........!
நாட்டுக்காகக்
குனிந்தவன்
நாடு
வளர்ந்துவிட்டது
அன்று
குனிந்தவன் இன்னும்
நிமிராமல்
இருக்கிறான்
இவனுக்கு
விமோசனமே இல்லையா.........?
தமிழர்
வாழ்வில்
நலங்கள்
சேர்க்கக் கடைக்கண்
பார்வைதனைத்
தாருமம்மா
ஏழையாய்
வாழும் வினைதனை
விரைவாய்ப்
போக்கிட உன்னருள்
பெற்றிடவே
வேண்டுகிறோம்.........!
புண்ணிய
நாட்டில் புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத்
தாயே வாழ்கவே
நாங்கள் பெற்ற சுதந்திரமே வாழியவே.........!
கருத்துகள்
கருத்துரையிடுக