முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரதாயே வணங்குகிறோம்

(சுதந்திரதினச் சிறப்புக் கவிதை)
கவிதை:   சுதந்திரத்தாயே வணங்குகிறோம்     
                             வே.ம.அருச்சுணன்
31 ஆகஸ்டு 1957
இனிய வரவுக்காக
உன் திருமுகத்தைக்
கண்குளிரக் காண்பதற்கு
மூவின மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா என்றே
ஏழுமுறை நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக் கூறி வரவு சொன்னோம்
எங்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த வெள்ளமாகியது..........!

அன்றுதான்
மக்கள் ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும் மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச் சுடரொளி  வியாபித்தது
மக்களிடையே பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும்  இடமில்லை
சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்  வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை நாளும் காத்திட
வளமுடனே  வாழ்வதற்கு
வழிதனைக் காட்டிடுவாய்
எங்கள் அன்புத்தாயே.........!

ஐம்பத்தாறு ஆண்டுகள்
பல்வேறு  சோதனைகள்
அணிகளாய்ப் பெற்றோம்
குள்ளநரிக் கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து விளையாட்டுக்கள் புரிந்தன
நீ தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம் புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும் பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால் வெற்றி கொண்டோம்.........!

தேசியக் கொடியில் மிளிரும்
வண்ணம் போல் மன ஒருமையால்
உலக மக்கள் பலருடனே
எண்ணத்தால் கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்  பெறுகிறோம்
அரசும் மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி தருவதால்  வாழ்கிறோம்............!

இனிய நாளிலே
இதயம் மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம் பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால் மன்னித்திடுத் தாயே
மனதில் ஏதும் கலங்கமில்லை........!

நாட்டுக்காகக் குனிந்தவன்
நாடு வளர்ந்துவிட்டது
அன்று குனிந்தவன் இன்னும்
நிமிராமல் இருக்கிறான்
இவனுக்கு விமோசனமே இல்லையா.........?

தமிழர் வாழ்வில்
நலங்கள் சேர்க்கக்  கடைக்கண்
பார்வைதனைத் தாருமம்மா
ஏழையாய் வாழும் வினைதனை
விரைவாய்ப் போக்கிட உன்னருள்
பெற்றிடவே வேண்டுகிறோம்.........!

புண்ணிய நாட்டில்  புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத் தாயே வாழ்கவே
நாங்கள்  பெற்ற சுதந்திரமே வாழியவே.........! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை