முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரதாயே வணங்குகிறோம்

(சுதந்திரதினச் சிறப்புக் கவிதை)
கவிதை:   சுதந்திரத்தாயே வணங்குகிறோம்     
                             வே.ம.அருச்சுணன்
31 ஆகஸ்டு 1957
இனிய வரவுக்காக
உன் திருமுகத்தைக்
கண்குளிரக் காண்பதற்கு
மூவின மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா என்றே
ஏழுமுறை நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக் கூறி வரவு சொன்னோம்
எங்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த வெள்ளமாகியது..........!

அன்றுதான்
மக்கள் ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும் மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச் சுடரொளி  வியாபித்தது
மக்களிடையே பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும்  இடமில்லை
சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்  வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை நாளும் காத்திட
வளமுடனே  வாழ்வதற்கு
வழிதனைக் காட்டிடுவாய்
எங்கள் அன்புத்தாயே.........!

ஐம்பத்தாறு ஆண்டுகள்
பல்வேறு  சோதனைகள்
அணிகளாய்ப் பெற்றோம்
குள்ளநரிக் கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து விளையாட்டுக்கள் புரிந்தன
நீ தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம் புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும் பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால் வெற்றி கொண்டோம்.........!

தேசியக் கொடியில் மிளிரும்
வண்ணம் போல் மன ஒருமையால்
உலக மக்கள் பலருடனே
எண்ணத்தால் கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்  பெறுகிறோம்
அரசும் மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி தருவதால்  வாழ்கிறோம்............!

இனிய நாளிலே
இதயம் மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம் பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால் மன்னித்திடுத் தாயே
மனதில் ஏதும் கலங்கமில்லை........!

நாட்டுக்காகக் குனிந்தவன்
நாடு வளர்ந்துவிட்டது
அன்று குனிந்தவன் இன்னும்
நிமிராமல் இருக்கிறான்
இவனுக்கு விமோசனமே இல்லையா.........?

தமிழர் வாழ்வில்
நலங்கள் சேர்க்கக்  கடைக்கண்
பார்வைதனைத் தாருமம்மா
ஏழையாய் வாழும் வினைதனை
விரைவாய்ப் போக்கிட உன்னருள்
பெற்றிடவே வேண்டுகிறோம்.........!

புண்ணிய நாட்டில்  புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத் தாயே வாழ்கவே
நாங்கள்  பெற்ற சுதந்திரமே வாழியவே.........! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...