முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரதாயே வணங்குகிறோம்

(சுதந்திரதினச் சிறப்புக் கவிதை)
கவிதை:   சுதந்திரத்தாயே வணங்குகிறோம்     
                             வே.ம.அருச்சுணன்
31 ஆகஸ்டு 1957
இனிய வரவுக்காக
உன் திருமுகத்தைக்
கண்குளிரக் காண்பதற்கு
மூவின மக்களும் ஒன்றாய்க் கூடி
மெர்டேக்கா....மெர்டேக்கா என்றே
ஏழுமுறை நெஞ்சுக் குழியின் அடியிலிருந்து
உரக்கக் கூறி வரவு சொன்னோம்
எங்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில்
மடைதிறந்த வெள்ளமாகியது..........!

அன்றுதான்
மக்கள் ஆனந்த கூத்தாடினர்
குடிசைகளிலும் மாடமாளிகைகளிலும்
மத்தாப்புச் சுடரொளி  வியாபித்தது
மக்களிடையே பேதமில்லை
மாற்றுக்கருத்துக்கும்  இடமில்லை
சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கும் தவறவில்லை
புவியில்  வாழுமட்டும் பெற்ற
சுதந்திரத்தை நாளும் காத்திட
வளமுடனே  வாழ்வதற்கு
வழிதனைக் காட்டிடுவாய்
எங்கள் அன்புத்தாயே.........!

ஐம்பத்தாறு ஆண்டுகள்
பல்வேறு  சோதனைகள்
அணிகளாய்ப் பெற்றோம்
குள்ளநரிக் கூட்டங்கள் சில்லறையாய்ச்
சித்து விளையாட்டுக்கள் புரிந்தன
நீ தந்த வாழ்வுக்குத் தீதாய்க்
குண்டு வைத்தே தகர்க்க எண்ணியோர்
கூட்டம் புறமுதுகுக் காட்டிக்
கண்ணினின்றும் பதர்களாய்ப் பறந்து செல்ல
ஒற்றுமையால் வெற்றி கொண்டோம்.........!

தேசியக் கொடியில் மிளிரும்
வண்ணம் போல் மன ஒருமையால்
உலக மக்கள் பலருடனே
எண்ணத்தால் கூடிவாழ்கிறோம்
நன்மைகள் நித்தம்  பெறுகிறோம்
அரசும் மக்களின் நாடிபிடித்தே
நல்லாட்சி தருவதால்  வாழ்கிறோம்............!

இனிய நாளிலே
இதயம் மகிழ்ந்திடும் வேளையிலே
சுதந்திரத்தாயிடம் பணிவாய் ஒரு விண்ணப்பம்
மாசிருந்தால் மன்னித்திடுத் தாயே
மனதில் ஏதும் கலங்கமில்லை........!

நாட்டுக்காகக் குனிந்தவன்
நாடு வளர்ந்துவிட்டது
அன்று குனிந்தவன் இன்னும்
நிமிராமல் இருக்கிறான்
இவனுக்கு விமோசனமே இல்லையா.........?

தமிழர் வாழ்வில்
நலங்கள் சேர்க்கக்  கடைக்கண்
பார்வைதனைத் தாருமம்மா
ஏழையாய் வாழும் வினைதனை
விரைவாய்ப் போக்கிட உன்னருள்
பெற்றிடவே வேண்டுகிறோம்.........!

புண்ணிய நாட்டில்  புத்தனாய் வாழ்வதற்கு
வழியமைத்தத் தாயே வாழ்கவே
நாங்கள்  பெற்ற சுதந்திரமே வாழியவே.........! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...