: உயிரைக்
குடிக்கும் போலிகள்
வே.ம.அருச்சுணன்
மக்களின் தோழன் காவல்துறை
நேர்த்தியாய் இருந்தது
தொல்லையென்றால்
ஓடோடி வந்து பணி செய்த காலம்
மலையேறிய விட்டதோ
அச்சநிலையில் இன்று மக்கள்
வாழ்கின்றனர்...........!
போலிஸ்சாரா? போலி சாரா?
மக்கள் தோழனா,மக்களின் எதிரியா?
காவல்துறை முகங்களில் இறுக்கம்
மக்களின் மனங்களில் நடுக்கம்..........!
2000
தொடங்கி இன்றுவரை
தடுப்புக்காவலில்
219 மரணங்கள்
பதினொரு நாளில்
நமது ரத்தத்தின்
மூன்று மரண ஓலங்கள்
மக்கள் தினம் செத்துப் பிழைக்கும்
துயரங்கள் தொடர்கதையோ..........?
வேலியே பயிரை மேய்வதேன்?
கள்ளத்தோணியில் இங்கு
வந்தாருக்கும் இல்லை கொடுமைகள்
நமக்கு மட்டும் வரிந்து கட்டி அநீதியேன்.........?
வேண்டாம் அநீதிகள்
சட்டம் எல்லாருக்கும் சமம்
சதிகள் அழியட்டும்
நீதி நிலைபெறட்டும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
வாழ்வில் வசந்தம் மலரட்டும்..............!
இளையோர்
பண்பாய் வளரட்டும்
தலைவர்கள் முன்மாதிரியாகட்டும்
உலகெங்கும்
நாட்டுப்புகழ் ஓங்கட்டும்
ஒளிமயமான வாழ்வு அமையட்டும்
ஓரினமாய்
நமது மக்கள் வாழ்வதற்கு
பெருந்தலைவர்கள் மனத்தில்
இசைவாய் செயல்கள் அமையட்டும்......!
குத்திவிட்டு
வேடிக்கை பார்க்கும்
கொடிய குணங்களை
வேரோடு அறுத்திடுக
நாட்டு அமைதிக்கு அநீதி செய்யும்
தலைவர்களை
நாட்டு நலம் கருதி
தடுப்புக்காவலில் வைத்திடுவோம்......!
சிறையில் சிதைந்து போன
நம்செல்வங்களின் அனுபவங்கள்
ஆணவத் தலைவர்கள்
தவறாமல் அனுபவிக்கட்டும்...........!
கருத்துகள்
கருத்துரையிடுக