முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரைக் குடிக்கும் போலிகள்

:        உயிரைக் குடிக்கும் போலிகள்      
                 வே.ம.அருச்சுணன் 

மக்களின் தோழன் காவல்துறை
நேர்த்தியாய் இருந்தது
தொல்லையென்றால்
ஓடோடி வந்து பணி செய்த காலம்
மலையேறிய விட்டதோ
அச்சநிலையில் இன்று மக்கள்
வாழ்கின்றனர்...........!

போலிஸ்சாரா? போலி சாரா?
மக்கள் தோழனா,மக்களின் எதிரியா?
காவல்துறை முகங்களில் இறுக்கம்
மக்களின் மனங்களில் நடுக்கம்..........!

2000 தொடங்கி இன்றுவரை
தடுப்புக்காவலில் 219 மரணங்கள்
பதினொரு நாளில்
நமது ரத்தத்தின்
மூன்று மரண ஓலங்கள்
மக்கள் தினம் செத்துப் பிழைக்கும்
துயரங்கள் தொடர்கதையோ..........?

வேலியே பயிரை மேய்வதேன்?
கள்ளத்தோணியில் இங்கு
வந்தாருக்கும் இல்லை கொடுமைகள்
நமக்கு மட்டும் வரிந்து கட்டி அநீதியேன்.........?

வேண்டாம் அநீதிகள்
சட்டம் எல்லாருக்கும் சமம்
சதிகள் அழியட்டும்
நீதி நிலைபெறட்டும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
வாழ்வில் வசந்தம் மலரட்டும்..............!

இளையோர்
பண்பாய் வளரட்டும்
தலைவர்கள் முன்மாதிரியாகட்டும்
உலகெங்கும்
நாட்டுப்புகழ் ஓங்கட்டும்
ஒளிமயமான வாழ்வு அமையட்டும்
ஓரினமாய்
நமது மக்கள் வாழ்வதற்கு
பெருந்தலைவர்கள் மனத்தில்  
இசைவாய் செயல்கள் அமையட்டும்......!

குத்திவிட்டு
வேடிக்கை பார்க்கும்
கொடிய குணங்களை
வேரோடு அறுத்திடுக
நாட்டு அமைதிக்கு அநீதி செய்யும்
தலைவர்களை
நாட்டு நலம் கருதி
தடுப்புக்காவலில் வைத்திடுவோம்......! 

சிறையில் சிதைந்து போன
நம்செல்வங்களின் அனுபவங்கள்
ஆணவத் தலைவர்கள்
தவறாமல் அனுபவிக்கட்டும்...........!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...