முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இந்த தலையெழுத்து

:            ஏன் இந்த தலையெழுத்து           
                           வே.ம.அருச்சுணன் 
ஆதியிலே
இருநூறு ஆண்டுகளின் வீதியிலே
இந்நாடு வெறும் காடுகளாக இருக்கையிலே
வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியிலே
மலைநாடாக இருந்த வேளையிலே
வயிற்றுப்பசிக்காக வந்த ஏழைகளிலே
ஆண் என்றும் பெண் என்றும் நிற்கையிலே
பாகுபாடு ஏதும் காட்டாத வகையிலே
வேலை வாங்கினான் அடிமை நிலையிலே
கொசுக்கடிக்கும் விஷப்பாம்புக் கடிக்கையிலே
உயிரிழந்தோர் எண்ணிக்கைக் கூடுகையிலே
விலங்குக்கு இரையான கணக்குக் கண்பிதுங்கயிலே……..!

நல்லுணவின்றி பல்வேறு நோய் கண்டார்
அநியாய சாவுகளை மலையாய்க் கொண்டார்
நாதியற்ற அநாதிகளாய் புதையுண்டார்
நாட்டே முதன்மை என்றார்
உயர்வுக்கு ஏணியாய் நின்றார்.........!

நிலத்தில் ஓடியது வியர்வை ஆறு நன்று
நொய்யத்தில் வடிந்தது பால் அன்று
இந்தியரின் குருதி என்றால் பிழையன்று
நாட்டின் வளம் உயர்ந்ததன்று............!

காட்டையழித்துச் சாலை அமைத்தான்
கருஞ்சாலைகளால் இனத்தைக்காட்டினான்
குன்றின்மீது மின்சாரக் கம்பம் நாட்டினான்
வாழ்வில் மட்டும் மடுவில் நின்றான்
குடிநீர் குளம்கட்ட உயிரைப் பணயம் வைத்தான்
தன்குடியுர மட்டும் கடுகளவும் எண்ண மறந்தான்
மரமாய் வாழ்ந்ததாலே மானமும் இழந்துவிட்டான்...........!

நாட்டுத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையில்
வீழ்த்தப்பட்டே நிர்கதியாய் துவண்டு நிற்கையிலே
தொலைநோக்கில்லா நம் மண்டைகளின் வீராப்பிலே
சொந்த இனத்தையே அடித்து உலையில் போடுகையிலே
நம்பிய மக்கள் நடுவீதியிலே யாசகம் செய்கையிலே
துரோகிகளை வீழ்த்திடவே தருணம் நெருங்கையிலே
கிழடுகளின் அட்டகாசம் அழித்திட அறவழியிலே
இளைய சிங்கங்கள் தெளிவுடன் நிற்கையிலே
தமிழன்  தன்மானமாய் வாழ்கையிலே
வாழ்வதற்குத் தீர்க்கமான வழியினிலே
ஒன்றாய் எழுவீர் இளஞ்சிங்கங்களே........!

ஆதியில் பாடுபட்ட தமிழன் அல்லலில்
உழைக்க மறுத்த இனம்
சோம்பி வாழ்ந்த மனம்
மகிழ்ச்சியின்  சொர்கவாசலில்
நம்மைக் கண்டு ஏளனம் எகத்தாளம்
இறக்கை கட்டிப்பறக்கிறது
அநீதிக்கு அரை நூற்றாண்டு
குடைபிடித்து நின்றது போதும்
இருளில் மொட்டை போட்டு
இளிச்சவாயர்களின் வரிசையில்
கொடிமரமாய் நின்றது போதும்
இனியாகிலும் நாட்டுக்குரியவனாய்
மிடுக்குடன் வாழ்ந்திட இன்றே
இளையோர் தன்னினம் எழுச்சி கொண்டு
துணிந்து எழுந்திடு உன் கடன் செய்திடுக
தலையெழுத்தை மாற்றிடுக........!
                               
                                முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...