முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இந்த தலையெழுத்து

:            ஏன் இந்த தலையெழுத்து           
                           வே.ம.அருச்சுணன் 
ஆதியிலே
இருநூறு ஆண்டுகளின் வீதியிலே
இந்நாடு வெறும் காடுகளாக இருக்கையிலே
வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியிலே
மலைநாடாக இருந்த வேளையிலே
வயிற்றுப்பசிக்காக வந்த ஏழைகளிலே
ஆண் என்றும் பெண் என்றும் நிற்கையிலே
பாகுபாடு ஏதும் காட்டாத வகையிலே
வேலை வாங்கினான் அடிமை நிலையிலே
கொசுக்கடிக்கும் விஷப்பாம்புக் கடிக்கையிலே
உயிரிழந்தோர் எண்ணிக்கைக் கூடுகையிலே
விலங்குக்கு இரையான கணக்குக் கண்பிதுங்கயிலே……..!

நல்லுணவின்றி பல்வேறு நோய் கண்டார்
அநியாய சாவுகளை மலையாய்க் கொண்டார்
நாதியற்ற அநாதிகளாய் புதையுண்டார்
நாட்டே முதன்மை என்றார்
உயர்வுக்கு ஏணியாய் நின்றார்.........!

நிலத்தில் ஓடியது வியர்வை ஆறு நன்று
நொய்யத்தில் வடிந்தது பால் அன்று
இந்தியரின் குருதி என்றால் பிழையன்று
நாட்டின் வளம் உயர்ந்ததன்று............!

காட்டையழித்துச் சாலை அமைத்தான்
கருஞ்சாலைகளால் இனத்தைக்காட்டினான்
குன்றின்மீது மின்சாரக் கம்பம் நாட்டினான்
வாழ்வில் மட்டும் மடுவில் நின்றான்
குடிநீர் குளம்கட்ட உயிரைப் பணயம் வைத்தான்
தன்குடியுர மட்டும் கடுகளவும் எண்ண மறந்தான்
மரமாய் வாழ்ந்ததாலே மானமும் இழந்துவிட்டான்...........!

நாட்டுத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையில்
வீழ்த்தப்பட்டே நிர்கதியாய் துவண்டு நிற்கையிலே
தொலைநோக்கில்லா நம் மண்டைகளின் வீராப்பிலே
சொந்த இனத்தையே அடித்து உலையில் போடுகையிலே
நம்பிய மக்கள் நடுவீதியிலே யாசகம் செய்கையிலே
துரோகிகளை வீழ்த்திடவே தருணம் நெருங்கையிலே
கிழடுகளின் அட்டகாசம் அழித்திட அறவழியிலே
இளைய சிங்கங்கள் தெளிவுடன் நிற்கையிலே
தமிழன்  தன்மானமாய் வாழ்கையிலே
வாழ்வதற்குத் தீர்க்கமான வழியினிலே
ஒன்றாய் எழுவீர் இளஞ்சிங்கங்களே........!

ஆதியில் பாடுபட்ட தமிழன் அல்லலில்
உழைக்க மறுத்த இனம்
சோம்பி வாழ்ந்த மனம்
மகிழ்ச்சியின்  சொர்கவாசலில்
நம்மைக் கண்டு ஏளனம் எகத்தாளம்
இறக்கை கட்டிப்பறக்கிறது
அநீதிக்கு அரை நூற்றாண்டு
குடைபிடித்து நின்றது போதும்
இருளில் மொட்டை போட்டு
இளிச்சவாயர்களின் வரிசையில்
கொடிமரமாய் நின்றது போதும்
இனியாகிலும் நாட்டுக்குரியவனாய்
மிடுக்குடன் வாழ்ந்திட இன்றே
இளையோர் தன்னினம் எழுச்சி கொண்டு
துணிந்து எழுந்திடு உன் கடன் செய்திடுக
தலையெழுத்தை மாற்றிடுக........!
                               
                                முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை