: நெஞ்சுப் பொறுக்குதில்லையே
வே.ம.அருச்சுணன்
இம்மண்ணில்
பிறந்த
டெங்கில், பெர்மாதா குடியிருப்போர்
நூறு
நாட்களாய் வீதியிலே
பணக்காரர்
வீட்டு நாய்கள்
குளிர்சாதன அறையிலே.....!
நாட்டை
வளமாக்கி
உருகுழைந்து அப்பாவிகள் உறங்க
நிதம் தவிப்பது
தலைவர்களுக்கு
கண்ணாமூச்சா?
எங்கோ
பிறந்தவர்கள்
புத்திரா ஜெயா
சொர்கபூமியில் உல்லாசம்
சகுனியின் வஞ்சனையால்
விரட்டப்பட்டோர்
நடுவீதியில்
கண்காணாத
நாட்டில்
குளிருக்குக்
கம்பளி
சொந்த
நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...!
ஏனோ, தமிழனின் கதறுல்கள்
யாருக்கும் கேட்பதில்லை
மற்றவருக்கு வெண்ணெய்
நமக்குச் சுண்ணாம்பு...!
மனித நேயத்தை
மறந்தான்
இறைவனும்
பெர்மாத்தா மக்களை மறந்தான்
மனிதன்
வஞ்சித்தது போதென்று
துன்பங்களை
மறந்து கண்ணயரும்
நடு இரவு
என்றும் பாராமல்
இடியாய்,மின்னலாய்,புயலாய்,மழையாய்
அல்லாட வைத்து
விட்டாயே?
மனிதனால் பட்டது போதாதென்று
இறைவா நீயுமா
எங்களைச் சோதிப்பது?
எங்கே போவோம்
இது நாங்கள்
பிறந்த பூமி....!
நம்பிக்கையில்
உயிரைப் பிடித்துக் கொண்டு
தீபத்திருநாளை
இல்லத்தில்
கொண்டா
வேண்டுகிறோம்
மனம் குளிரும்
செய்தி
விரைவில்
வந்திட ஏங்குகிறோம்
நடுவீதியில்
நிர்கதியில்
உன்பார்வை
எங்கள் மீது
வரைந்து
விழுவட்டும்
பிள்ளைக்
குட்டிகளின் கண்ணீர்
நொடியில்
மறையட்டும்
கணக்கின்றி
நாட்டைச் சுற்றிவரும்
தெய்வங்கங்களே
உன் பத்தர்கள்
நெடிய நலம்
பெற
ஆசி வழங்கிட
வந்திடுவீர்.....!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக