முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சுப் பொறுக்குவதில்லையே...

:      நெஞ்சுப் பொறுக்குதில்லையே                        
               வே.ம.அருச்சுணன்

இம்மண்ணில் பிறந்த
டெங்கில், பெர்மாதா குடியிருப்போர்
நூறு நாட்களாய் வீதியிலே
பணக்காரர் வீட்டு நாய்கள்
குளிர்சாதன அறையிலே.....!

நாட்டை வளமாக்கி
உருகுழைந்து  அப்பாவிகள் உறங்க
நிதம் தவிப்பது தலைவர்களுக்கு
கண்ணாமூச்சா?

எங்கோ பிறந்தவர்கள்
புத்திரா ஜெயா சொர்கபூமியில் உல்லாசம்
சகுனியின் வஞ்சனையால்
விரட்டப்பட்டோர் நடுவீதியில்
கண்காணாத நாட்டில்
குளிருக்குக் கம்பளி  
சொந்த நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...!
ஏனோ, தமிழனின் கதறுல்கள்
யாருக்கும் கேட்பதில்லை
மற்றவருக்கு வெண்ணெய்
நமக்குச்  சுண்ணாம்பு...!

மனித நேயத்தை மறந்தான்
இறைவனும் பெர்மாத்தா மக்களை மறந்தான்
மனிதன் வஞ்சித்தது போதென்று
துன்பங்களை மறந்து கண்ணயரும்
நடு இரவு என்றும் பாராமல்
இடியாய்,மின்னலாய்,புயலாய்,மழையாய்
அல்லாட வைத்து விட்டாயே?
 மனிதனால் பட்டது போதாதென்று
இறைவா நீயுமா எங்களைச் சோதிப்பது?
எங்கே போவோம்
இது நாங்கள் பிறந்த பூமி....!

நம்பிக்கையில் 
உயிரைப்  பிடித்துக் கொண்டு
தீபத்திருநாளை இல்லத்தில்
கொண்டா வேண்டுகிறோம்
மனம் குளிரும் செய்தி
விரைவில் வந்திட ஏங்குகிறோம்
நடுவீதியில் நிர்கதியில்
உன்பார்வை எங்கள் மீது
வரைந்து விழுவட்டும்
பிள்ளைக் குட்டிகளின் கண்ணீர்
நொடியில் மறையட்டும்
கணக்கின்றி நாட்டைச் சுற்றிவரும்
தெய்வங்கங்களே உன் பத்தர்கள்
நெடிய நலம் பெற
ஆசி வழங்கிட வந்திடுவீர்.....!
 
              முற்றும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...