முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சுப் பொறுக்குவதில்லையே...

:      நெஞ்சுப் பொறுக்குதில்லையே                        
               வே.ம.அருச்சுணன்

இம்மண்ணில் பிறந்த
டெங்கில், பெர்மாதா குடியிருப்போர்
நூறு நாட்களாய் வீதியிலே
பணக்காரர் வீட்டு நாய்கள்
குளிர்சாதன அறையிலே.....!

நாட்டை வளமாக்கி
உருகுழைந்து  அப்பாவிகள் உறங்க
நிதம் தவிப்பது தலைவர்களுக்கு
கண்ணாமூச்சா?

எங்கோ பிறந்தவர்கள்
புத்திரா ஜெயா சொர்கபூமியில் உல்லாசம்
சகுனியின் வஞ்சனையால்
விரட்டப்பட்டோர் நடுவீதியில்
கண்காணாத நாட்டில்
குளிருக்குக் கம்பளி  
சொந்த நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...!
ஏனோ, தமிழனின் கதறுல்கள்
யாருக்கும் கேட்பதில்லை
மற்றவருக்கு வெண்ணெய்
நமக்குச்  சுண்ணாம்பு...!

மனித நேயத்தை மறந்தான்
இறைவனும் பெர்மாத்தா மக்களை மறந்தான்
மனிதன் வஞ்சித்தது போதென்று
துன்பங்களை மறந்து கண்ணயரும்
நடு இரவு என்றும் பாராமல்
இடியாய்,மின்னலாய்,புயலாய்,மழையாய்
அல்லாட வைத்து விட்டாயே?
 மனிதனால் பட்டது போதாதென்று
இறைவா நீயுமா எங்களைச் சோதிப்பது?
எங்கே போவோம்
இது நாங்கள் பிறந்த பூமி....!

நம்பிக்கையில் 
உயிரைப்  பிடித்துக் கொண்டு
தீபத்திருநாளை இல்லத்தில்
கொண்டா வேண்டுகிறோம்
மனம் குளிரும் செய்தி
விரைவில் வந்திட ஏங்குகிறோம்
நடுவீதியில் நிர்கதியில்
உன்பார்வை எங்கள் மீது
வரைந்து விழுவட்டும்
பிள்ளைக் குட்டிகளின் கண்ணீர்
நொடியில் மறையட்டும்
கணக்கின்றி நாட்டைச் சுற்றிவரும்
தெய்வங்கங்களே உன் பத்தர்கள்
நெடிய நலம் பெற
ஆசி வழங்கிட வந்திடுவீர்.....!
 
              முற்றும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை