எழுச்சி கொள்வோம்
வே.ம.அருச்சுணன்
இனிய உள்ளங்களே
இறை நம்பிக்கை மிக்கோரே
கண்களைத் திறந்து பாருங்கள்
கனவுகளை நீட்டிக்கவே வாருங்கள்...!
56 ஆண்டு
நாம் கண்ட கனவு பலித்ததா
சுதந்தரக் காற்றைச் சுவாசிக்கிறோமா...?
சஞ்சிக்கூலிகளாக வந்த நாம்
கெஞ்சாமல் வாழ்கிறோமா...?
சொல் மனமே சொல்?
மனம் திறந்து சொல்...?
ஆதியில் வந்து காட்டை அழித்து
நாட்டை உருவாக்கிய
தமிழ் இனமே....
வாழ்வின்
சுகத்தை அனுபவிக்கிறோமா...?
இன்னுயிரை நாட்டுக்காத்
தாரளமாகத் தாரை வார்த்தோமே
பலன் கண்டோமா...?
கோட்டை விட்டோமா...?
சிந்திக்கும் வேளை வந்திவிட்டது
சிதறாமல்,பதறாமல்
செயல் படும்
நேரம் நெருங்கிவிட்டது
குனிந்தது
போதும்
குட்டு வாங்கியதும் போதும்
தமிழினமே…
ஒன்று படுவோம் ஏற்றமுடன்
மானம்,மரியாதையோடு வாழவே
எழிச்சி கொள்வோம்
விரைவில் மீள்ச்சி கொள்வோம்
தடம் தப்பாமல் விரைவாய்
வாருங்கள் தமிழினமே.....!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக