முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்காலம் மண்ணாகலாமா...

:          எதிர்காலம் மண்ணாகலாமா           8.5.2013
                            வே.ம. அருச்சுணன் 

நடந்து முடிந்த
பதின்மூன்றாவது தேர்தலில்
மூவினத்தின்
அடையாளம் தெரிந்தது.....!

மூன்று வந்தேறிகளுக்கும்
நிலைமை தெரியவில்லை
ஆட்டத்தை நிறுத்தவில்லை
வயிற்றுக்காக வாடிய மக்கள்
வந்த இடத்தில்
வகை தெரியாமல் வாழ்கின்றன.....!

இங்கே
ஏற்றம் தராது மந்திரத்தை
துணிவாய் முழங்குவதும்
ஒருவரைவொருவர்
தின்று ஏப்பமிட எண்ணுவதும்
வீண் வம்பு
சொன்னால் நம்பு.....!

எடுப்பது பிச்சை
பேசுவதோ கொச்சை
பேச்சில் ஒற்றுமை
நடப்பில் வேற்றுமை
அகம்பாவம்
தனக்கே எல்லாமென்ற
குறுகிய உள்ளம்
சிறக்குமா இந்த பெருநிலம்....?

கேடு கெட்ட  உள்ளமே
துன்மார்க்கனே
சுனாமி
எந்த உருவில்
வருமென்று தெரியுமா....?

முதுகொடிந்த
தமிழனுக்கு இன்னுமா
சோதனைகளும்....வேதனைகளும்......?

ஒரு சொல் கேளீர்
சீன சமூகம்
அவர்களோடு கூடிப்பழகு
ஒற்றுமையின் உச்சம் தெரியும்
போராடும் வல்லமை புரியும்
அவர்கள்
மொழி....பண்பாடு
கணமும் மறந்ததில்லை
எழிச்சியைக் கிஞ்சிற்றும்
துறந்ததில்லை.......!

யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
யாரையும் ஏற்பதும் இல்லை
சுயமாய் சிந்திப்பதும்
செயல்படுவதும்
அவர்களின் வெற்றிக் கவசங்கள்......!

உண்மை உணர்வீர்
இனிய வாழ்வு
மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்.....!

இளையோரே முன்வருவீர்
தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
அடிமை வாழ்வைத் துறந்தே
சுயமாய் வாழ்வு சிறக்க
சொந்த தொழில் புரிவோம்
அடிமைத்தொழிலை மறந்து
செல்வச் சீமானாகத் திகழ்வோம்......!

கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
உறக்கக்கூறுவோம்
ஒரே குரலில்......!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை